“இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்காக பாரத பிரதமரின் (PM-CARES) நிதி வேண்டுதலுக்கு ரூபாய் 25 கோடிகள் நன்கொடை அளிக்கிறேன்”, என்று யூசுப் அலி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவரது நன்கொடை பதிவிற்கு, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் நன்றி தெரிவித்து பதில் செய்தியினை அனுப்பியுள்ளது. அதில், “திரு. யூசூப் அவர்களுக்கு துபாயில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரின் சார்பாகவும் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் அனைத்து இந்தியரின் சார்பாகவும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நம் சமூகத்தின் வளர்ச்சிக்கான உங்களின் பங்களிப்புக்கு நன்றிகள்” என்று துபாய் இந்திய துணை தூதரக அதிகாரி விபுல் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி PM-CARES என்னும் பெயரில் கொரோனா நிவாரண நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. அதில் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில்
ஆங்கிலத்தில்
I have humbly contributed INR 25 Crores to #PMCaresFund to support all relief works in India’s fight against #COVIDー19 @narendramodi @PMOIndia #IndiaFightsCorona— Yusuffali M. A. (@Yusuffali_MA) April 2, 2020
0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்