கத்தாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் நேற்று (11.04.2020) ஒரு முக்கியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது செல்லுபடியாகும் வதிவிட அனுமதியுடன் ( With Valid Residency Permit) விடுமுறைக்காக, அல்லது வேறு காரணங்களுக்காக கத்தாரை விட்டு வெளியேறிய இலங்கையைர்கள் மீண்டும் கத்தாருக்கு வர விரும்பினால், அவர்கள் தங்களது கீழ்வரும் தகவல்களை தூதரகத்துக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- குடும்பப் பெயர்
- ஏனைய பெயர்கள்
- கத்தார் ID இலக்கம்
- கடவுச் சீட்டு இலக்கம்
- தற்போது தங்கியிருக்கும் நாடு
- கத்தாரில் பணிபுரியும் இடம்
- தொலைபேசி இலக்கம்
- ஈமெயில்
மேற்படி விபரங்களை lankaembassyq80@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை கத்தாருக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான, உத்தியோக பூர்வ கோரிக்கையை கத்தார் அரசாங்கத்திடம் முன்வைக்கவே மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் கத்தாரில் உள்ள இலங்கைத் தூதகரம் தெரிவித்துள்ளது.
(தகவல் - கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் முகநூல் பக்கம்)
0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்