கத்தார் நகராட்சி அதிகாரிகளினால் நடாத்தப்படும் திடீர் சோதனைகளில் மேலும் இரண்டு உணவகங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதீனா கலீபா மற்றும் பின் மஹ்மூத் போன்ற பகுதிகளில் இயங்கி வந்த இரு உணவகங்களே இவ்வாறு சிக்கியுள்ளதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மதீனா கலீபாவில் அமைந்திருந்த உணவகம் பெருமளவிலான கோழி இறைச்சிகளை பேணுதலற்ற வகையில் சேமித்து வைத்துள்ளமையினாலும், சமைத்த இசை்சிகளை அறையொன்றில் முறையற்ற விதத்தில் பூட்டி சேமித்து வைத்திருந்தமையினால் பின் மஹ்மூத் பகுதியில் உள்ள உணவகத்துக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
தரமான, ஆரோக்கியமான உணுவுகளை கத்தார் வாழ் மக்களுக்கு வழங்கும் நோக்கில் அடிக்கடி இது போன்ற திடீர் சோதனைகளில் கத்தாரில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்