கத்தாரில் காலவதியான உணவுப் பொருட்களை சேமித்து வைத்து, அதற்கு புதிய திகதிகளையிட்டு மீள சந்தைக்கு அனுப்ப பயன்படுத்தப்பட்ட களஞ்சியசாலையொன்று அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அல் ராய்யான் நகராட்சி மையத்யத்தினல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலே இப்பறிமுதல் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காலவதியான உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் பணியாளர்களை் கொண்டு புதிய காலவதி திகதிகள் பொறிக்கப்பட்டு அந்த உணவுப் பொருட்களை மீண்டும் சந்தைக்கு அனுப்பும் பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அல் ராய்யான் நகராட்சி மையத்துக்கு சொந்தமான அல் முர்ரா பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றிலேயே இந்த நாசகார வேலை இடம்பெற்றுள்ளதாக நகராட்சி மையத்தின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 350 KG சூரியகாந்திவிதைகளும், 360KG தர்பூசனி விதைகளும், 30KG இனிப்பு பொருட்களும், மற்றும் 350KG ஏனைய இனிப்பு பொருட்களும் அடங்குகின்றன. இதில் கைது செய்யப்பட்டவர்கள் தகுந்தை சட்ட நடவடிக்கைளுக்கு உட்படுத்துப்படுவார்கள் என்பதோடு, மேற்படி களஞ்சில சாலைக்கு 60 நாட்கள் திறப்பதற்தான தடை மற்றும் அபராதம் போன்றவை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்