ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் இலங்கையில் காணப்படும் நிலவரம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினர் இலக்குவைக்கப்படுவது குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் இந்தியாவிலும் முஸ்லீம் சமூகத்தினர் அவர்களை கொவிட்19 உடன் தொடர்புபடுத்தும் குரோத பேச்சுக்கள் களங்கப்படுத்தல்களால் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்