http://3.bp.blogspot.com/-7oSLkIk7UUs/ViYiKynRMlI/AAAAAAAAHqs/vJ3ELVCXRS0/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

இலங்கையில் இருந்து பயணித்த, இந்தியருக்கு கொரோனா - திருப்பி அனுப்பியது கத்தார்!

Written By Admin on Friday 19 June 2020 | Friday, June 19, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட பயணி ஒருவர் இன்று அதிகாலை கட்டார் நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர் இந்திய நாட்டு மாலுமி என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாலுமிகள் உட்பட 65 பேர் வருகைத்தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கப்பல்களில் சேவை செய்வர்களாகும். அவர்களில் 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கட்டாருக்கு சென்றுள்ளனர்.

அவ்வாறு சென்ற 15 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக டோஹாவில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அதற்கமைய அவர் அந்த நாட்டிற்கு சென்ற விமானத்திலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

அவ்வாறு வந்த இந்திய நாட்டு மாலுமி கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni