அனைத்து பாடசாலைகளைகளையும், இரண்டாம் தவணைக்காக, மீண்டும் மே 11ஆம் திகதி, திங்கட்கிழமை, தொடங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னர் - இரண்டாம் தவணை, ஏப்ரல் 20ஆம் திகதி தொடங்கப்படுவதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
கொரோனா நோய்க்கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளின் முதற்கட்டமாகப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்காகத் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறைக் காலங்களில் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அதே வேளை - பல்கலைக்கழகங்களை மீளத் தொடங்கும் திகதி தொடர்பாக ஆராய்ந்த மீளாய்வு செய்யுமாறு - பல்கலைக்கழக முகாமையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினர் உயர்கல்வி அமைச்சின் மூலம் கேட்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்