http://3.bp.blogspot.com/-7oSLkIk7UUs/ViYiKynRMlI/AAAAAAAAHqs/vJ3ELVCXRS0/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

இலங்கை பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே 11ஆம் திகதி ஆரம்பிக்கும்!

Written By Admin on Sunday 12 April 2020 | Sunday, April 12, 2020

அனைத்து பாடசாலைகளைகளையும், இரண்டாம் தவணைக்காக, மீண்டும் மே 11ஆம் திகதி, திங்கட்கிழமை, தொடங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னர் - இரண்டாம் தவணை, ஏப்ரல் 20ஆம் திகதி தொடங்கப்படுவதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

கொரோனா நோய்க்கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளின் முதற்கட்டமாகப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்காகத் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறைக் காலங்களில் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

அதே வேளை - பல்கலைக்கழகங்களை மீளத் தொடங்கும் திகதி தொடர்பாக ஆராய்ந்த மீளாய்வு செய்யுமாறு - பல்கலைக்கழக முகாமையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினர் உயர்கல்வி அமைச்சின் மூலம் கேட்கப்பட்டுள்ளனர்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni