சிலாபம் பொது மருத்துவமனையில் பணியாற்றும் தனது மனைவியை கத்தியால் குத்த முயன்ற சிலாபம் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் கடமையில் இருந்த மனைவியுடன் பிரதேசசபை உறுப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மனைவியை கத்தியால் குத்த முயன்றபோது, பாதுகாப்பு அதிகாரிகள் தலையிடடு, கத்திக்குத்திலிருந்து தடுத்தனர்.
பின்னர் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கணவர் தன்னுடன் எப்பொழுதும் சண்டையிட்டு துன்புறுத்துவதாக மனைவி ஏற்கனவே மெதம்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததும் குறிப்பிடத்தககது.



0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்