கத்தாரின் டோஹா நகராட்சி மையத்தின் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது 10 உணவகங்கள் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தரமற்ற வகையில் உணவுகள் சமைத்து வைக்கப்பட்டிருந்தமை மற்றும் சமையற் பொருட்கள் ஒழுங்கான முறையில் சோமித்து வைக்கப்பட்டிருக்காமை போன்ற தவறுகளால் உணவகங்கள் சிக்கியுள்ளன.
மேற்படி உணவகங்களுக்கு குற்றங்களுக்கு ஏற்றாற் போல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் உணவகங்கள், சூபர்மாட்க்கட்டுக்கள், வெதுப்பகங்கள் போன்றவையும் உள்ளடங்கியுள்ளன.










0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்